திருமணமாகி 4 வருடத்தில் நடிகையுடன் விவாகரத்து!! உலக கோப்பை டி20க்கு ரெடியாகாத ஹர்திக் பாண்டியா..
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் ஐபிஎல்-ன் மும்பையின் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யவுள்ள செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறிய மும்பை அணியின் கேட்பன் உலக கோப்பை டி20 போட்டிக்காக விளையாட காத்திருந்துள்ளார். இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை பலரும் விமர்சித்து வந்தனர்.
கடந்த 2020-ல் செர்பியாவை சேர்ந்த மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நடாஷா கர்ப்பமாகிய சில மாதத்தில் ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு குழந்தை பெற்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் பிரிந்துவிட்டதாகவும், நடாசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்த சில புகைப்படங்களை டெலீட் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய சொத்தில் 70 சதவீதம் பங்கினை மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா எழுதி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகனுக்கு 4 வயதாகப்போகும் நிலையில் இருவரும் பிரியப்போவது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

4 வயதில் மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து!! மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து செட்டில் செய்யும் ஹர்திக் பாண்டியா
இந்நிலையில், உலக கோப்பைக்கு தேர்வாக போட்டியாளர்கள் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் இன்னும் செல்லவில்லையாம். இந்த விவகாரம் காரணமாக தான் ஹர்திக் பாண்டியா செல்லவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.