IPL-ல் படுதோல்வி!! மனைவியை விவாகரத்து செய்கிறாரா MI கேப்டன் ஹர்திக் பாண்டியா...
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் ஐபிஎல்-ன் மும்பையின் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யவுள்ள செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சர்ச்சையில் சிக்கியதோடு கடைசி முதல் இடத்தினை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடையை கட்டினார். இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை பலரும் விமர்சித்து வந்தனர்.
கடந்த 2020ல் செர்பியாவை சேர்ந்த மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு குழந்தை பெற்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் பிரிந்துவிட்டதாகவும், நடாசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்த சில புகைப்படங்களை டெலீட் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சில காலமாக இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்வதில்லை என்றும் நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் பாண்டியாவை நீக்கிவிட்டதாகவும் பாண்டியா மனைவி நடாஷாவின் பிறந்தநாளுக்கு பின் (மார்ச் 4) ஜோடியாக எடுத்த புகைப்படங்களை பகிர தவிர்த்துவிடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், இந்த தகவலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருவரின் தரப்பில் இருந்து எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.