முதல் இடத்தில் நயன்தாரா நோ.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை, இத்தனை கோடியா?
சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
சாய் பல்லவி:
ப்ரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை வாங்கி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வாருகிறார்.
நயன்தாரா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2.
மேலும், பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்போது, இவர் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 18 கோடி வரை வாங்கி வருகிறார்.