நடிகைகளை வைத்து அந்த தொழில்!! 41 வயது நடிகையை வளைத்து பிடித்த போலிசார்...
அனுஷ்கா மோனி மோகன் தாஸ்
மும்பை தானேயில் உள்ள காஷிமிரா பகுதியில் நடிகைகளை வைத்து விபச்சாரம் நடந்து வருவதாக போலிசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது 41 வயதான நடிகை அனுஷ்கா மோனி மோகன்(மூன்) தாஸ் என்பவர் தான் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்துள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். மாடல் நடிகையும் இந்தி, பெங்காலி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ்.
விபச்சார தொழில்
இந்நிலையில், போலிசார் போலி வாடிக்கையாலர் மூலம் மோகன் தாஸை தொடர்பு கொள்ள வைத்து, மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள மிரா ரோடு பகுதியில் இருக்கும் ஒரு மாலுக்கு வந்து தன்னை சந்திக்கும்படி அந்த நடிகை கூறியிருக்கிறார்.
அதன்படி போலிசார் அனுப்பிய போலி வாடிகையாளர்கள் 2 பேரிடம் இருந்து அங்கு சென்று, மூன் தாஸ் பணம் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலிசார் நடிகை மூன் தாசை கையும்களவுமாக பிடித்தனர்.
2 நடிகைகள் மீட்பு
அவர் நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். பெங்காலி, தமிழ், தெலுங்கு நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளை, அவர் விபச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் இதற்காக நடிகைகளுக்காக ஏங்கும் செல்வந்தர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, இந்த தொழிலை நடந்தி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து மூன் தாசை போலிசார் கைது செய்தும் அவரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 2 நடிகைகளை போலிசார் மீட்டு விசாரணைக்கு பின் அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரும் டிவி சீரியல்கள் மட்டுமின்றி பெங்காலி சினிமாக்களிலும் நடித்து வந்ததாகவும் மிரா-பயந்தர், வசாய்-விரார் என்ற பெயர் என்று உதவி கமிஷ்னர் மதன் லால் தெரிவித்துள்ளார். நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்து வந்த நடிகை ஒருவர் கைது செய்துள்ளது தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.