போட்டிபோட்டு காதலருடன் இரவு பார்ட்டி!! ஹிரித்திக் ரோஷனை வெறுப்பேற்றும் முன்னாள் மனைவி
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிரித்திக் ரோஷன். சமீபத்தில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுசன்னே கானை 14 வருடங்கள் கழித்து 2014ல் விவாகர்த்து செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு பிறகு இரு குழந்தைகளை பார்க்க மட்டும் இருவரும் சந்தித்து வந்தனர். லாக்டவுனுக்கு பிறகு சுசன்னே கான் Arslan Goni என்பவருடன் லிவிங்டு கெதரில் இருந்து வருகிறார். ஹிரித்திக் ரோஷனும் சபா அசாத் என்பவருடன் காதலில் இருந்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு இரவு பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதற்கு ஹிரித்திக் ரோஷன் காதலி சபா அசாத்துடன் ஜோடியாக வந்தார்.
அவரை தொடர்ந்து ஹிரித்திக்கின் முன்னாள் மனைவி சுசன்னே தன்னுடைய புதிய காதலருடன் கைக்கோர்த்தபடி வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹிரித்திக்கை வெறுப்பேற்ற தான் அவர் கலந்து கொள்ளும் இடமெல்லாம் சுசன்னே ஜோடிபோட்டு வருகிறார் என்று கூறி வருகிறார்கள்.