குழந்தையே வேண்டாம்னு தேவயானி கிட்ட சொன்னேன்!! மகள் முன்பே உண்மையை உடைத்த ராஜகுமாரன்..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த தேவயானி, தற்போது சீரியல்களிலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு கணவர் மற்றும் தன் இரு மகள்களுடன் பேட்டியொன்றில் தேவயானி கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தும் இருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் ராஜகுமாரன் தன்னுடைய மகள் இனியாவுடன் அளித்த பேட்டியொன்றில் பல உண்மைகளை கூறியிருக்கிறார். முதலில் எனக்கு குழந்தைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனென்றால், எனக்கு இந்த அப்பாவை பிடிக்காது, இந்த அம்மாவை பிடிக்காது.
இந்த மோசமான உலகத்தில் எந்த தைரியத்தில் கொண்டு வந்தீர்கள், வாழ்வது எப்படி, போராடுவது, கஷ்டப்படுவது என்று கேட்பார்கள். கிராமத்தில் வாழ்வது எப்படியொரு போராட்டமா இருக்கிறது?.
இதுல நாம குழந்தையை கொண்டு வந்து அவனையும் போராட வைக்கனும் என்று நினைத்தால், நம் இருவரையும் என்ன நினைப்பாங்க. அதனால் எனக்கு பிடிக்கலன்னு நமக்கு எதுக்கு குழந்தை, நாமலே குழந்தை தான் என்று வேண்டாம் என்று தேவயானியிடம் சொன்னேன். இதற்கு தேவயானி ஒத்துக்கொள்ளவே இல்லை என்று ராஜகுமாரன் தன் மகள் முன்பே உண்மையை கூறியிருக்கிறார்.