அம்மாவுக்கு எதுவுமே செய்யாமல் குடும்பத்தோடு செட்டிலான இளையராஜா!! இசைஞானியின் மறுப்பக்கம்...
இளையராஜா
இந்திய சினிமாவின் இசை அடையாளமாக திகழ்ந்து 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்து இசைஞானி என்று புகழப்பட்டு வருபவர் தான் இளையராஜா. சினிமாவில் இசையமைத்து வந்தவர் கடந்த வருடத்தில் கூட லண்டனுக்கு சென்று செம்போனி இசையையும் அரங்கேற்றிவிட்டு வந்தார்.

இந்தியாவில் இருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றியவர் என்ற பெருமையை பெற்றார் இளையராஜா. இதற்காக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பிலும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அம்மாவுக்கு எதுவுமே
இந்நிலையில், இளையராஜா சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியொன்று திடீரென டிரெண்டாகி இருக்கிறது.

அதில், நாங்கள் சென்னைக்கு வரும்போது ரேடியோவை விற்று 400 ரூபாய் பணம் கொடுத்தார் எங்கள் அம்மா. அந்த பணத்தை எங்களிடம் கொடுத்துவிட்டு, இதுபோதுமா என்று கேட்டார். நாங்களோ வீட்டு செலவுக்கூட ரூ. 50 அம்மாவுக்கு கொடுக்காமல் மொத்த பணத்தையும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம்.
இசையமைப்பாளராக நான் வந்தப்பின் என்னுடைய மனைவி பிள்ளைகள் என அனைவரும் செட்டிலாகிவிட்டோம், அப்போதும் அம்மாவுக்கு புடவை, வளையல், நகை என எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை என்று வேதனையுடன் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.