ஆணுறை அணியும் போது அது முக்கியம்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை இலியானா..
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை இலியானா டி குரூஸ். இப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். பாலிவுட்டில் கிளாமர் காட்சிகளில் நடித்து பிரபலமான இலியான இடையில் ஒருவருடன் காதலில் இருந்து பிரேக்கப் செய்தார்.
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த இலியானா, நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த இலியானா திடீரென தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
திருமணமே ஆகாமல் எப்படி கர்ப்பம் என்று பல கேள்விகள் எழுந்தது. அதன்பின் தன் காதலரை அறிமுகம் செய்தார். கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் இலியான் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஆணுறை உபயோகிப்பது பற்றிய கருத்தை கூறியிருக்கிறார். ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்கலை தடுக்கவும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் தான் பயன்படுத்துகிறார்கள்.
அப்படி பயன்படுத்தும் போது ஆணுறை பாக்கெட்டுகள் கிழியாமல், ஓட்டை இல்லாமல் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். ஏனென்றால் தயாரிப்பின் போது ஏற்படும் சில தவறுகள் பாக்கெட்டுகள் கிழிந்தோ அல்லது ஓட்டையாக இருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை அணியும் முன் அதை கவனிக்க வேணும் என்பது பாதுகாப்பான வழி என்று இலியானா கூறியிருக்கிறார்.