வேண்டாம்ன்னு, விடிய விடிய கெஞ்சி கதறிய அஞ்சலி.. விடாத ஜெய்யை பிரிய இதுதான் காரணமா..
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான படம் கற்றது தமிழ், இப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டுநடித்து பிரபலமானார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று. அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக நடித்திருந்தனர்.
அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஞ்சலி வாய்ப்பில்லாமல் வாழ்க்கை பாழானதாகவும் செய்திகள் வெளியானது. இதனைதொடர்ந்து ஜெய்யை விட்டு பிரிந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அஞ்சலி.
சமீபத்தில் பயில்வான் அளித்த பேட்டியொன்றில், ஜெய் ஒரு கட்டத்தில் அதிக மது பழக்கத்திற்கு அடைமையாகிவிட்டார். இதனை பார்த்து இந்த பழக்கம் வேண்டாம்ன நம் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும் என்று விடியவிடிய கெஞ்சியிருக்கிறார் அஞ்சலி.
ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த ஜெய், அஞ்சலி எவ்வளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை. இதனால் நம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று எண்ணி தான் ஜெய்யின் காதலை முறித்து இருக்கிறார் அஞ்சலி என்றும் தெரிவித்திருக்கிறார் பயில்வான்.
You May Like This Video