ஐஸ்வர்யா ராய் என் மகள் கிடையாது.. நான் ஏன் அப்படி இருக்கணும்!! மாமியார் ஜெயா பச்சன்...
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து பச்சன் வீட்டு மருமகளானார். அதன்பின் ஒரு மகளை பெற்று வளர்ந்து வந்த ஐஸ்வர்யா ராய், மாமனார் வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் என்று செய்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் ஒரு விளக்கத்தினை கொடுத்திருந்தார்.
அதில், அவருடைய திருமணம் மோதிரத்தை காட்டி, "நாங்கள் இன்னும் தம்பதியாக இருக்கோம். இதை குறித்து நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் எதாவது சொன்னால் அது வேறுவிதத்தில் சென்றுவிடும். ஏன் மாதிரி எல்லாம் பேசுகிறார்கள் தெரியவில்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சனின் வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து பகிரப்பட்டும் வருகிறது. அதில் ஜெயா பச்சனிடம், நீங்கள் ரொம்ப strict-ஆன அம்மாவா என்றும் ரொம்ப strict-ஆன மாமியாரா என்றும் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், மகளுக்கும் மருமகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் என மகள் நினைக்க மாட்டார். ஆனால் மருமகள், மாமனார் மாமியார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. நான் ரொம்ப strict-ஆன அம்மா, ஆனால் ஐஸ்வர்யா என் மகள் அல்ல மருமகள். அதனால் நான் ஏன் அவரிடம் strict-ஆக இருக்க வேண்டும், அவர்கள் அம்மா அப்படி இருந்திருப்பார் என்று நினைக்கிறே என்று ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.