விவாகரத்துக்கு அப்ளை செய்த ஜெயம் ரவி?.. பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ஆர்த்தி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சபிதா ஜோசப், "சூர்யா ஜோதிகா போல கோலிவுட் சினிமாவில் ஜெயம் ரவி - ஆர்த்தி நட்சத்திர ஜோடிகளாக இருக்கின்றனர். இதுவரை எந்த சர்ச்சையில் சிக்கவில்லை, நல்ல தம்பதியாக இருந்து வருகின்றனர்".
"இந்த நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியை கொடுக்கிறது. உண்மையா பொய்யா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். விவாகரத்து வேண்டி ஜெயம் ரவி கோர்ட்டில் அப்ளை செய்து விட்டார் போன்ற சில தகவல்கள் நன்பக தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் உண்மையா இருக்க கூடாது என்று நாங்களும் வேணடுறோம். ஆர்த்தி, ஜெயம் ரவியை ரொம்ப விரும்புகிறார், அவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கிறார் போன்ற செய்திகள் வருகிறது" என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ள கருத்து, அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.