12 வயசுலேயே அதை நிறுத்திவிட்டேன்.. ஜெயம் ரவி பற்றிய ரகசியத்தை கூறிய தந்தை மோகன் ராஜா..
ஜெயம் ரவி விவாகரத்து
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பாடகி ஒருவர் தான் என்று கூறப்பட்டு அவரும் அதற்கான விளக்கத்தை அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவ்விவகாரம் குறித்து பலர் விமர்சித்தபடி கருத்துக்களை கூறி வரும் நிலையில், ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான மோகன் ராஜா தன் மகன் எப்படிப்பட்டவன் என்ற சில தகவலை பகிர்ந்துள்ளார்.
தந்தை மோகன் ராஜா
அதில், நான் உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் என் மகன் பிறந்தான். ஆரம்பத்தில் நன்றாக இருந்தநிலையில் எனக்கு திடீரென கைக்கால் இழுத்து வைத்துவிட்டது. அப்போது என் மகன் பிறந்த அடுத்த நாளே ந் உடலில் மாற்றம் தெரிந்து ஒருநாட்டு வைத்தியரின் உதவியால் நான் பழைய நிலைக்கு குணமாகினேன்.
அவன் பிறந்தப்பின் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது. என்னுடைய மகன் ஸ்கூலில் படிக்கும்போது அங்கு நண்பர்கள் அவனை ஹீரோ போல் நடத்த தொடங்கிவிட்டார்கள். ஜெயம் ரவி 6 வயது இருக்கும் போது பரதநாட்டியம் கிளாஸில் சேர்த்து பின் 12 வயதானதும் நடை மாறும் என்பதால் நிறுத்திவிட்டேன்.
பின் அடிக்கடி நீ வெளிய போயிட்டு வா என்று கனல்கண்ணன் உட்பல பலருடன் அனுப்பி வைத்து குதிரை ஏற்றம், பைட் எல்லாம் கற்று கொண்டார். பம்பாயில் ஒரு கல்லூரியில் நடிப்புக் கற்றுக்கொள்வதற்காக ஜெயம் ரவிக்கு சீட்டு தரமாட்டேன் என்றார்கள்.
நடிகர்களின் வாரிசுகள் வந்து ஒரு வருஷம் கூட நடிக்காமல் போய்விடுவார்கள் என்று சொன்னதும் அப்படியெல்லாம் கிடையாது இவன் படித்து சர்டிபிகேட் வாங்கி வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அங்கு தனியாக ரூம் எடுத்து சமையல்காரையும் ரெடி பண்ணி கொடுத்தேன். பின் எல்லா மொழியிலும் நடிக்கும் ஒரு நடிகராக மாறி இருந்தார் என்று மகன் ஜெயம் ரவி பற்றி மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.