இப்படியானவர்களை கூட வெச்சிருந்தா ஆபத்து? ஜெயம் ரவி மனைவிக்கு என்ன ஆச்சு!!
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் ரவி. ஜெயம் படத்தில் நடித்ததால் ஜெயம் ரவி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதன்பின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
தாஸ், மழை, இதயதிருடன் போன்ற படங்கள் போதிய வெற்றியை பெறாமல் போனது. இதையடுத்து உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை போன்ற படங்களையும் கொடுத்தார்.
சமீபத்தில் மிருதன், டிக்டிக்டிக், வனமகன் போன்ற படங்களால் வெற்றியும் கொடுத்தார். தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும் ஜனகனமன என்ற படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2009ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த ஜெயம் ரவி ஆரவ், அயான் என்ற இரு மகன்களையும் பெற்றார்.
மூத்த மகன் ஆரவ்வை டிக்டிக்டிக் படத்தில் நடிக்கவும் வைத்தார். மனைவி ஆர்த்தியுடன் இணைந்து போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வைரலாக்கிய ஜெயம் ரவி அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ஆர்த்தி மாறினார்.
தற்போது போட்டோஷூட் எடுத்து இணையத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு நடிகைகளுக்கு டஃப் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பதிவில், பொறாமை கொண்டவர்களை நாம் அருகில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.
அவர்கள் நம்மை ஒரு போட்டியாக பார்ப்பார்கள் ஆனால் நாமோ அவர்களை நண்பர்கள் குடும்பத்தினர் என பார்த்துவிடுவோம் என்று பதிவிட்டுள்ளார். என்ன ஆனது ஆர்த்தி என்று பலர் இந்த பதிவிற்கு பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.