பல கோடி சொத்துக்காக நெப்போலியன் மகனுடன் திருமணம்.. பகிர் கிளப்பும் பிரபலம்!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சினிமா துறையில் கலக்கிய இவர் அரசியலிலும் இறங்கி தன்னுடைய அடையாளத்தை முத்திரை பதித்தார்.
நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறு வயதில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கிறார். அவருடைய சிகிச்சைக்கு இந்தியாவில் சரியான வசதி இல்லாத காரணத்தால் அமெரிக்கவில் சிகிச்சை அளித்து வந்தார். கடைசியில் மகனுக்காக அமெரிக்காவில் சென்ற அவர், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடிக்கவுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியா பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், நெப்போலியன் மகனுக்கு அக்ஷயா மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்க முடியாது. ஒரு செவிலியராகத்தான் அந்தப் பெண் இருப்பார்.
மேலும் அவர் பேசுகையில், தனுஷின் திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது. அதனால்தான் அவர்கள் திருமணத்தை ஜப்பானில் வைத்திருக்கிறார்கள்.
தனுஷை, அக்ஷயா பணிப்பெண்ணாக
பார்த்துக்கொண்டார். அதனால் என்னுடைய முழு சொத்தும் எனக்கு பிறகு அக்ஷயாக்கு தான். இப்படியெல்லாம் பேசி தான் திருமணத்திற்கு ஓகே சொல்ல வைத்து இருப்பார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த தமிழா தமிழா பாண்டியனை பலரும் சமூக வலைத்தளங்களில் திட்டிதீர்த்து வருகின்றனர்.
You May Like This Video