போதையில் தள்ளாடிய குஷ்பூவை தாங்கி சென்ற இளம் நடிகர்.. கண்ணால் பார்த்தேன்!! ஷாக் கொடுத்த பிரபலம்
80, 90 காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்த குஷ்பூ இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வெளிநாட்டில் படிக்க வைத்து ஆளாக்கி வருகிறார்.
தற்போது பாஜக கட்சியின் உறுப்பினராக இருந்து பல கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், இணையத்தில் அளித்த பேட்டியொன்றில் குஷ்பூ பற்றிய சில விசயங்களை பகிர்ந்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
ஒரு நாள் குஷ்பூ சென்னையில் இருக்கும் ஒரு ஓட்டலில் மது போதையில் தள்ளாடியபடி வந்திருக்கிறார். அந்நேரத்தில் ஓடி வந்த இளம் நடிகர், குஷ்பூவை பிடித்து கார் வரை அழைத்துச்சென்று காரிலும் ஏற்றிவிட்டிருக்கிறார்.
அதன்பின் காரானது வேகமாக
சென்றதை என் கண்ணால் பார்த்ததாகவும் அவரால்
இல்லை என்று சொன்னால் என் மீது வழக்கும் போடுங்கள்
என்று பாண்டியன் தெரிவித்திருக்கிறார். அப்படி இருந்த
குஷ்பூவிற்கு இன்று தேசிய மகளிர்
ஆணையத்தலைவியாக பொறுப்பு என்றும் விமர்சித்து
பேசியிருக்கிறார்.