பிரபல நடிகர் செய்த துரோகம்!! கடனால் நொந்துப்போன சேரன்!! பிரபல சொன்ன தகவல்..
இயக்குநர் சேரன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் சேரன், ஆட்டோகிராஃப் படத்திற்காக பல நடிகர்களிடம் கதையை கூறி அவமானப்பட்ட சம்பவத்தை பகிர்ந்தார். இது பேசுபொருளாக மாறியதை அடுத்து பத்திரிக்கையாளர் சுமைர் இதுகுறித்த கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அதில், கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்களில் சேரனும் ஒருவர். ஆனால் காலம் அவரை கொண்டாட மறுத்துவிட்டது. சேரனின் பாரதி கண்ணம்மா படத்தை பார்த்து மறைந்த அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி படம் குறித்து பாராட்டியபடி கடிதம் எழுதினார்.
இதனையடுத்து பல படங்களை வெற்றிக்கண்ட சேரன், தேசிய கீதம் என்ற படத்தை இயக்கி பல போராட்டங்களுக்கு பின் வெளியாகியும் தோல்வியடைந்தது. அதன்பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தும் பெரியளவில் வெற்றி பெற்றது ஆட்டோகிராஃப்.
பின் அவர் தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்ததால் பணத்தேவைக்காகவும் கடனுக்காகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விஜய் சேதுபதி, கிச்சா சுதீஸ் உள்ளிட்ட நடிகர்களிடம் கதை கூறி, கடைசியில் அவரை வருட கணக்கில் காக்க வைத்துவிட்டு முன் அந்த படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது.
இதை சேரன் பேட்டியில் வேதனையுடன் சொல்லி இருந்தார் என்று பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.