நடிகையுடன் திருமணத்திற்கு முன் நெருக்கம் காட்டிய சூர்யா!! வெளிநாட்டுக்கே ஓடவைத்த ஜோதிகா...

Suriya Jyothika Gossip Today Tamil Actress
By Edward Apr 06, 2024 04:29 AM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு குழந்தை பெற்று வளர்த்தப்பின் மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் சைத்தான் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ஜோதிகா. இந்நிலையில் ஜோதிகா, பிரபல நடிகைக்கு செய்த ஒரு செயல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகையுடன் திருமணத்திற்கு முன் நெருக்கம் காட்டிய சூர்யா!! வெளிநாட்டுக்கே ஓடவைத்த ஜோதிகா... | Jyotika Angry About Laila Close To Suriya In Shoot

திருமணத்திற்கு முன் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த ஜோதிகா லைலா மற்றும் ரம்பாவுடன் 3 ரோசஸ் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தினை ரம்பா தன் அண்ணனுடன் இணைந்து தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் லைலா மீது ஜோதிகா சில கருத்து வேறுபாட்டால் வாய் சண்டை போட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதற்கு காரணம் 3 ரோசஸ் படம் ஆரம்பித்த போது, ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார். தினமும் ஜோதிகாவை சூர்யா தான் பிக்கப் செய்ய வருவார் என்று சமீபத்தில் லைலாவே ஒரு பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

நடிகையுடன் திருமணத்திற்கு முன் நெருக்கம் காட்டிய சூர்யா!! வெளிநாட்டுக்கே ஓடவைத்த ஜோதிகா... | Jyotika Angry About Laila Close To Suriya In Shoot

வேறொரு படத்தில் நடித்த லைலா, சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்துள்ளதை பார்த்த ஜோதிகா, நடிகை லைலா மீது சிடுசிடுவென இருந்துள்ளார். அந்த மன நிலையில் தான் லைலா அந்த படத்தினை முடித்திருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பின் 3 ரோசஸ் படம் 2003ல் வெளியாகி படுமோசமான நஷ்டத்தை ரம்பாவுக்கு கொடுத்தது.

இதனால் படுதோல்வியாலும், நிதி நெருக்கடியாலும், அந்த படத்திற்கு பின் நடிக்காமல் வெளிநாட்டுக்கு சென்று திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார் நடிகை ரம்பா. அந்த சமயத்தில் இந்த செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அதன்பின் தான் சூர்யா - ஜோதிகா திருமணம் 4 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.

You May Like This Video