கமலை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்! மேடையில் கைநீட்டி மிரட்டிய கே ராஜன்..வீடியோ..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்-ற்கு பிறகு ஒருசில நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் கமல் ஹாசன்.
அந்தவகையில், திரைப்பட தயாரிப்பாளர் ஐசர் கணேசனின் தந்தையும் முன்னாள் அதிமுக எம் எல் ஏவுமானா ஐசரி வேலன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் மார்பளவு சிலை திறப்பு விழா பெற்றது. மூத்த நட்சத்திரங்கள் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு நடிகர் கமல் ஹாசனும் கலந்து கொண்டுள்ளார்.
மேடையில் உட்கார்ந்திருந்த கமலை கண்டுகொள்ளாமல் சென்ற தயாரிப்பாளர் கே ராஜன் அவர் பக்கத்தில் உட்காரும் படி ஒருவர் கூற கைநீட்டில் மிரட்டியுள்ளார். ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று சமுகவலைத்தளத்தில் ஒரு பேச்சாக இருந்துள்ளது.
இதற்கு காரணம் பழைய நினைவுகள் தானாம். கமல் ஹாசன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அப்போதிலிருந்தே கமல் ஹாசனை பற்றி அவதூறாகவும் அவர் கண் படாமலும் தள்ளி இருந்து வருகிறாராம் கே ராஜன். ரஜினி நல்ல நடிகர் கமல் ஒரு மிருகம் என்று கூட கேவளமாக விமர்சித்தார் கே ராஜன். இதனால் பல முறை கமல் ரசிகர்கள் மிரட்டியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.