நடிகை ரேகாவுடன் தனி அறையில் கமல் ஹாசன்? வெளுத்து வாங்கிய மனைவி வாணி..
சினிமாத்துறையை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போது ரசிகர்களுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் சினிமா பிரபலங்களின் சில சம்பவங்கள் வெளியாகும் போது பெரும் பேசுபொருளாகும்.

அப்படி 1970ல் தமிழ் சினிமாவையே உலுக்கிய சம்பவமாக கமல் ஹாசன், ரேகா மற்றும் அவரது மனைவி கணபதி தொடர்பான சம்பவம் தான் பேசு பொருளானது.
1979ல் ஓட்டல் சோழா ஷெரட்டனில் கமல் ஹாசனுடன் ஒரே ரூமில் ஜெமினி கணேசனின் மகள் ரேகாவுடன் இருந்ததை கமல் மனை வாணி கணபதி பார்த்ததாக ஓட்டல் ஊழியர் பார்த்ததாக அப்போதைய பத்திரிக்கையில் பேசப்பட்டது.

ஆனால் எது உண்மை என்று பெரியளவில் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த பேட்டியில், அப்போது அந்த ஓட்டலில் நான் இரவு வேலைக்கு வந்தபோது அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது.

வரவேற்பறையில் இருந்த பெண்கள், கமல் ஹாசனும் ரேகா கணேசனும் ஓட்டலில், ரேகாவின் அறையில் இருந்தபோது கமலின் மனைவி வாணி கணபதி வந்து தன் கணவரை பகிரங்கமாக திட்டினார் என்பதை கூறியதாக தெரிவித்துள்ளார்.