கனகாவை அசிங்க அசிங்கமா பேசுவார்.. அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் கனகா. இவர் ராமராஜன் நடிப்பில் 1989 -ம் ஆண்டு வெளியான "கரகாட்டக்காரன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல ஆண்டுகளாக சினிமாவில் விலகி இருந்த கனகா, தற்போது பெண் உதவியாளருடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், கனகா இந்த நிலைமையில் இருக்க காரணமே அவரது பெற்றோர்கள் தான். கனகாவை அவரது அப்பா கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். பதிலுக்கு கனகாவும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசுவார்.
மேலும் ஷூட்டிங் முடிந்த உடன் எங்கேயும் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு நெருக்கடி கொடுத்தார் கனகாவின் அம்மா. இது அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது.
ஒரு நடிகரை திருமணம் செய்யவிருந்தார் ஆனால் கடைசியில், தன்னுடைய அப்பா போல் தான் இருப்பார்கள் என்கிற எண்ணத்தால், திருமணமே செய்து கொள்ளவில்லை. தனிமையிலேயே இருந்துவிட்டார் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.