அப்போ 2014 தான் நமக்கு சுதந்திரமா? ஒரேஒரு விருதால் ஜி பக்கம் பல்டி அடித்து உளறிய பத்மஸ்ரீ நடிகை!
இந்தியாவில் சாதித்தவர்களுக்காக பத்ம ஸ்ரீ விருது சமீபத்தில் பெற்றார். நான்கு தேசிய விருதுகளுக்கு பின் மத்திய அரசால் கவுரவிக்கப்பட்டார் கங்கனா ரானாவத். இதையடுத்து சமீபத்தில் சுதந்திரம் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எது பேசினாலும் சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா பேசி வருவது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் அவர் பேசியதில், 1947ல் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் பிச்சை என்றும் 2014ல் கிடைத்தது தான் சுதந்திரம் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்ததால் அது சுதந்திரம் இல்லை என்றும் மோடிஜி ஆட்சி தான் உண்மையான சுதந்திரம் என்று கருத்துக்களை கூறினார். இதை பல கட்சியினர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் ஆம் ஆத்மி கங்கனாவின் அவதூறு மற்றும் தேசதுரோக கருத்துக்கு போலிசாரிடம் புகாரளித்து 504, 505, 124ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.