போராடிய இந்து பெண்கள் சாக்கடைகள்!! CJP-யின் Gen Z-ஐ வெளுத்து வாங்கிய நடிகை கங்கனா..
டெல்லியில் ஜந்தர் பந்தராவில் நீட் முறைகேடு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்று சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அவர்களின் போராட்டம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து 3 கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தை நிறுத்தினர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் வீடியோக்களை பார்த்து நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
கங்கனா ரனாவத்
அதில், அவர்களின் வீடியோக்களை பார்க்கும்போது அவை யாரும் வாந்தி வரவழைப்பவையாக இருந்தது. இந்த போராட்டக்காரர்கள் அழுக்கு, குப்பை, அசிங்கத்தை பரப்புகிறார்கள். இந்த போராட்ட வீடியோக்களை பார்த்து, தான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். தனக்கு ஒரு ஓய்வு தேவை என்று தெரிவித்துள்ளார். மேலும் என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை.

Gen Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் குமட்டலை வரவழைக்கிறது. அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் மொழி என் வாழ்நாளில் மக்கள் இவ்வளவு உறுத்தலாகவும், இவ்வளவு அநாகரீகமாகவும் இருப்பதை கண்டதில்லை. இவர்களை எல்லாம் யார் பெற்றெடுத்து வளர்ப்பது? இந்திய நாடு என்பது பண்பாட்டு நுட்பத்தில் வேரூன்றிய பலதரப்பட்ட அழகான மக்கள் வாழும் ஓர் இடம். ஆனால் நீங்கள் உங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக் கொள்வதோடு அவற்றை போலவே நடந்து கொள்கிறீர்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற இந்து பெண்களை சாடிய கங்கனா, நான் அவர்களை சாக்கடை தலைமுறை என்று அழைக்கிறேன். இவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதில்லை, மிகவும் அசிங்கமானவர்களாகவும் ஊழல் நிறைந்தவர்களாகவும் இருப்பதால், இத்தகைய பெண்களால் ஒரு சிறந்த இல்லத்தரசிகளாக இருக்க முடியாது என்று மோசமான விமர்சித்து பேசியிருக்கிறார் கங்கனா ரனாவத்.