அண்ணன் காதலால் மிரட்டி வைக்கப்பட்ட நடிகர் கார்த்தி? ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ்..

Karthi Sivakumar Jyothika
By Edward Jul 19, 2022 02:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகர் கார்த்தி. அப்பா சிவக்குமார் மற்றும் அண்ணன் சூர்யாவின் உதவி இல்லாமல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். அதன்பின் நடிகர் சங்கம், படங்கள் என்ற் தற்போது பிஸியாக இருந்து வருகிறார்.

கார்த்தி காதலிக்காமல் அப்பா அம்மா பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு காரணம் சூர்யா - ஜோதிகாவின் காதல் விசயம் தான்.

சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்ததை அடுத்து வெளிநாட்டில் படித்து முடித்து வந்த கார்த்தியிடன் காதலிக்க கூடாது என்று கண்டீசன் போட்டு வளர்த்து வந்துள்ளனர்.

அதனால் தான் கார்த்தி காதல் திருமணம் செய்யவில்லையாம். சூர்யா தான் அதை செய்யல நீயாவது இதை செய் என்று மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அட்வைஸ் செய்திருந்தாராம்.

சூர்யா ஜோதிகாவை காதலித்து இருந்தார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு திருமணத்தை முடித்து வைக்க ஆரம்பித்து பத்திரிக்கை கொடுக்க ஜெயலலிதாவை பார்க்க நான் கார்த்தி, என் மனைவி சென்றோம்.

அப்போது சூர்யா காதல் திருமணம் செய்கிறார், கார்த்தி நீயாவது அப்பா அம்மா பேச்சை கேட்டு அவர்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள் என்று அறிவுரை கூறினார்.