போதை ஊசி போட்டு ஷூட்டிங் வராம தொல்லை கொடுத்த கார்த்திக்!! புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற பெயரோடு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்தவர் நடிகர் கார்த்திக். ஆரம்பத்தில் இருந்து சில கிசுகிசுக்கள் சர்ச்சைகளில் சிக்கிய கார்த்திக் பற்றி பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் பி. வாசுவை வைத்து கார்த்திக், மாளவிகா, விவேக், ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பாரதம் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் மாணிக்கம் நாராயணன் சீனு என்ற பெயரில் தயாரித்திருந்தார். அப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது.
அதற்கான காரணம் ராங்கான இயக்கம், ராங்கான சப்ஜெக்ட் தான். வாசு எங்கிட்ட முதல்லயே சொன்னாரு, நாம் ஒரு காமெடி படம் எடுப்போம், ஆனா நான் தான் கேட்கல. இல்லன்னா மலையாளத்துல சிபி மலையில் அருமையான படத்தை எடுத்து இருக்காரு.
அந்த படத்துல நெடுமுடி வேணு ரோலில் சத்யராஜ், மோகன்லால், மம்முட்டின்னு யாரையாவது நடிக்க வைத்து உள்ளே இறங்கிருப்பேன். அது மாபெரும் தவறுன்னு லேட்டா தான் புரிஞ்சிடுச்சு.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற மாதிரி, அதுல கார்த்திக் நம்மள போட்டு சாகடிச்சிட்டாரு. போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வராம... நடந்தது நடந்து போச்சி விடுங்க.. என்று சளித்துக் கொண்டு மாணிக்கம் நாராயணன் புலம்பி இருக்கிறார்.