ரோட்டில் பாடுறதுக்கு காப்பி ரைட்ஸ் கேப்பாங்களா.. அப்பா பாட்டையே!! இளையராஜா மகன் கார்த்திக் ராஜா...
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமையாளராக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா தன் இரு மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக்கினார். சமீபகாலமாக யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது கார்த்திக் ராஜாவும் இரு இசை நிகழ்ச்சியை கிங் ஆப் கிங்ஸ் என்ற பெயரில் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
வெளிநாட்டில் முதலில் மலேசியாவில் நடப்பதாக கூறியும் கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி தமிழகத்திலும் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளார். அதற்கான அறிவிப்பிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் கார்த்திக் ராஜா. அவர் பேசியதில், முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன், ஆனால் சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்நிகழ்ச்சிக்கு எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் தன் அப்பாவின் பாடல்களும் இடம்பெறும். 4 மணி நேர நிகழ்ச்சியாக திட்டமிட்டிருக்கிறோம். காப்புரிமை குறித்து ஆய்வு செய்து பாடல்களை தேர்வு செய்தும் தன் அப்பாவிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்துகிறோம் என்று கார்த்திக் ராஜா கூறியிருக்கிறார்.
மேலும், உங்களுக்கு பிடித்த பாடலை பாடுங்கள், காப்பி ரைட்ஸ் இல்லாமல் பாடுங்கள் என்று நிரூபர்கள் கேட்க, ரோட்டுல பாடுறதுக்கெல்லாம் காப்பி ரைட்ஸ் கிடையாது என்று தன் அப்பா இளையராஜாவின் தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை பாடியிருக்கிறார்.