பிரபல நடிகையை கடத்தி துன்புறத்தல் செய்த வழக்கில் முன்னணி நடிகை சிக்கினார்

dhilip kavya madhavan
By Tony Apr 10, 2022 10:20 AM GMT
Report

கேரளா திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவது தற்போது பிரபல நடிகையை கடத்தி துன்புறுத்திய நிகழ்வு தான். இதை செய்ய சொன்னதே பிரபல நடிகர் திலீப் என்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்தவர் காவ்யா மாதவன்.

அவரும் நடிகை கடத்தப்பட்டு துன்புறுத்திய நிகழ்வில் முக்கிய குற்றவாளியாக இருப்பார் என்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளதாம்.

அவர் போனில் இதுக்குறித்து பேசிய ஆடியோ லீக் ஆகி பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

போலிஸார் விரைவில் இதுக்குறித்து விசாரணையை தொடங்கவுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது.