குடிக்க கூட தண்ணீர் கிடைக்கல!! புலம்பித்தள்ளும் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி..

Chennai Keerthi Pandian Michaung Cyclone
By Edward Dec 07, 2023 06:40 AM GMT
Report

கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொட்டித்திர்த்த கடுமையான மழை தாக்கதால் பல இடங்களில் வெள்ளம் புரண்டது. அதிலிருந்து தற்போது வரை இன்னும் பல இடங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் இருக்கிறது. பல சினிமா பிரபலங்களின் வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதை கூறியும் நிவாரண பொருட்களை கொடுத்தும் வந்தனர்.

குடிக்க கூட தண்ணீர் கிடைக்கல!! புலம்பித்தள்ளும் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி.. | Keerthi Pandian Shares Post About Cyclone Michaung

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்த நடிகை கீர்த்தி பாண்டியன் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் இருக்கும் விவேகானந்தா கல்லூரி இருக்கும் இடத்தில் நிமிடத்திற்கு நிமிடம் தேங்கி இருக்கும் தண்ணீரில் சாக்கடை நீர் கலந்துள்ளது. யாரும் சுத்தம் செய்ய வரவில்லை என்றும் தரைத்தளத்தில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் தன்ணீர் புகுந்துள்ளது.

நீயெல்லாம் பொண்ணா கருமம்!! அர்ச்சனாவை படுகேவலமாக பேசிய நிக்‌ஷன்.. அடுத்த ரெட்கார்ட் ரெடி?

நீயெல்லாம் பொண்ணா கருமம்!! அர்ச்சனாவை படுகேவலமாக பேசிய நிக்‌ஷன்.. அடுத்த ரெட்கார்ட் ரெடி?

2015 வெள்ளத்தில் கூட தேங்காத தண்ணீர் தற்போது நிலைமையே தலைகீழாக மாற்றிவிட்டது. அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளை கூட பெற வெளியில் செல்ல முடியவில்லை. குடி தண்ணீர் கூட இல்லை என்றும் 48 மணிநேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லை தயவு செய்து உதவுங்கள் என்று குறிப்பிட்டு அப்பகுதியில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இதனையடுத்து கீர்த்தி பாண்டியன் போட்ட பதிவின் மூலம் அந்த இடத்தில் தேங்கி இருந்த நீரை சரி செய்துவிட்டதாகவும் நன்றி கூறியும் ஒரு பதிவினை போட்டிருக்கிறார் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன். இவரை போல் நடிகர் விஷால், விஷ்ணு விஷால், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் சமுகவலைத்தளங்களில் இதுகுறித்து பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளனர்.