தாமரை விரியனும்! நடிகை கீர்த்தி சுரேஷின் தாயாரின் மேனகாவின் விருப்பம் இதான்...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத கிளாமர் ஆடையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியா முழுவதும் வரும் ஜூன் 1 வரை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ் நாட்டில் நடந்து முடிந்த நிலையில், இன்று கேரளாவிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தன்னுடைய ஓட்டினை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா போட்டுவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். கேரளாவில் பாஜக வரவில்லையே, மற்றவர்கள் தான் இருக்கிறார்கள்.
தாமரை விரியும் விரியனும், நான் நம்புகிறேன், கேரளாவில் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. நிறைய வாய்ப்பும் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் மக்கள் கையில் தான் இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷின் தாயார் கூறியிருக்கிறார். இதற்கு பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.