6 வருஷமா கீர்த்தி சுரேஷை திட்டித்தீர்த்த விஜய்யின் நெருங்கிய நண்பர்.. சஞ்சீவ் மனைவி ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி என்ற படத்தில் நடித்து தேசிய விருதினையும் பெற்றார். அப்படத்தினை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தாலும் சரியான வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் பாலிவுட் படத்தில் அறிமுகமாகியும் நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ், தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் நடிகரும் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் பற்றிய சில கருத்துக்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷுடன் சஞ்ஜீவின் மனைவி ப்ரீத்தியும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் கீர்த்தியிடம், நீங்களும் ப்ரீத்தியும் சஞ்ஜீவை சேர்ந்து கிண்டல் செய்து இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு கீர்த்தி சுரேஷ் பயத்துடன் அய்யயோ இல்லை, அக்கா கிண்டல் பண்ணுவாங்க நான் பண்ணமாட்டேன் என்று கூறியிருக்கிறார். பின் பேசிய ப்ரீத்தி, கீர்த்தி சுரேஷ் எவ்வளவு தான் கிளோஷ்-ஆக இருக்கலாம், இன்று வரை சஞ்ஜீவை சார் என்று தான் கூப்பிடுவார்.
பேர் சொல்லி கூப்பிடு, அண்ணான்னு கூப்பிடு என்று 6 வருஷமா சொல்லிட்டாரு, இல்ல சார்ன்னே கூப்பிடுறேன் என்று கீர்த்தி சொல்லிடுவாள். சஞ்ஜீவ் வந்ததும் அவரை பார்த்து சைலெண்ட் ஆகிவிடுவார். சஞ்ஜீவ்க்கு யாரு ஒல்லியானாலும் பிடிக்காது, அதுல கீர்த்தி சுரேஷ் ஒல்லியானதால் திட்டு வாங்கி இருக்காள். உன்னை யாரு ஒல்லியாக சொன்னாங்க என்று உரிமையுடன் திட்டுவார் என்று ப்ரீத்தி கூறியிருக்கிறார்.
இதற்கு கீர்த்தி சுரேஷ், இடையில் ஒல்லியாகிவிட்டேன், அந்த சமயத்தில் எதுக்கு இதெல்லாம் என்று சொல்லிட்டே இருப்பார், அதன்பின் சமீபத்தில் உடல் கூடியதை பார்த்து ஓகே லுக்கிங் ஃபிட் என்று கூறிய பின் தான் நிம்மதி வந்தது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.