என்னது குஷ்பூ லண்டனில் இவ்ளோ பெரிய வீட்டுக்கு சொந்தக்காரியா?
Khushbu
By Parthiban.A
நடிகை குஷ்பூ ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர். பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் அவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது சீரியல்கள், படங்களில் குணச்சித்திர ரோல்கள் என பிசியாக இருக்கும் அவர் சில தினங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் புது வீட்டில் காபி குடிக்கிறேன் என போட்டோ வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர் பிரம்மாண்ட புது வீட்டை சொந்தமாக வாங்கிவிட்டார் என வாழ்த்து கூறினார்கள்.

ஆனால் அந்த கமெண்டுகளை பார்த்து டென்ஷன் ஆன நடிகை குஷ்பூ 'அது வாடகை வீடு' என கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
