நீ சிக்னல்ல பிச்சை எடுப்ப!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த KPY பாலா..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருபவர் தான் பாலா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த பாலா, கஷ்டப்படுபவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.
சமீபகாலமாக பேரிடர் நடக்கும் இடங்களுக்கு சென்று உதவி செய்தும், ஆம்புலன்ஸ் வசதி, இலவச ஆட்டோ வசதி என்று பல சமுக சேவைகளை செய்து வருகிறார். சமீபத்தில் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்ணை கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு கூட்டிச்சென்ற செய்தி இணையத்தில் கசிந்தது. இதனை அறிந்த பாலா அந்த மக்களுக்கு தனது 5வது ஆம்புலன்ஸ்-ஐ வழங்கி உதவியிருக்கிறார்.
அதன்பின் பேசிய பாலா, இவர் பின்னாடி யாரோ ஒருவர் செயல்படுகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். ஆமாம் எனக்கு பின் செயல்படுகிறார்கள். அவர்களால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று மக்களை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
மேலும், நீ எதிர்காலத்தில், சிக்னலில் பிச்சை எடுப்ப, நான் பார்த்தா கூட காசு போடாமல் போவேன் என்றும் சிலர் கமெண்ட்ஸ் போடுகிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ, அந்த சிக்னலில் என் ஆம்புலன்ஸ் வரும் என்னால் முடிந்தது நான் செய்வேன், செய்து கொண்டே இருப்பேன், அது என் எதிர்காலத்தை காப்பாற்றும் என்று நம்புகிறேன்.
இவனுடைய பிணம் மிருங்கங்களால் கொத்தி சாப்பிடப்படும். பிரைவேட் ஐடி விங் மூலம் காசு வாங்கி, என்னை பற்றி தப்பாக பேசுவதற்கு, அந்த காசை என்னிடம் கொடுங்கள் நானே தப்பாக போட்டு உதவி செய்கிறேன் என்று பாலா பதிலடி கொடுத்துள்ளார்.