அசிங்கப்படுத்திய இந்திக்காரர்கள்!! கோபத்தில் சண்டைக்கு போன நடிகை குஷ்பூ..
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கடந்ந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தது தமிழக ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு மிகபெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அவரின் மரணத்திற்கு இந்தியாவில் இருக்கும் பலர் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
கேப்டன் விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் அவருடன் நடித்த அனுபவம் பழகிய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தமிழ் சினிமவில் ஃபெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தி திரையுலகத்தில் இருந்து சிலர் வந்திருந்தார்கள்.
அவர்களில் பலர் கடுமையாக பந்தா செய்து கொண்டிருந்தார்கள். ஒருமுறை அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு விஜயகாந்தும் நானும் ஒரு விஷயமாக சென்றிருந்தோம். அப்போது விஜயகாந்தை பார்த்து சிலர், இவன்லாம் ஒரு ஹீரோவா என்று இந்தியில் நக்கல் செய்தவாறு சிரித்தார்கள்.
விஜயகாந்த் உட்கார ஒரு நாற்காலி கூட போடவில்லை. இதனை பார்த்த நான் அவர்களிடம் சண்டைக்கு சென்றேன். ஆனால் விஜயகாந்த், நமக்கு காரியம் தான் முக்கியம் அமைதியாக இரு, அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேள் என கூறி சுமூகமாக கையாண்டதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.