தமிழர்கள் பிச்சைக்காரர்கள்!! லால் சலாம் பட ஹீரோயினியால் வெடித்தது சர்ச்சை
பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன், தான்யா பாலகிருஷ்ணன்குறித்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்த பதிவில், "தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்" என்று பதிவிட்டு இருந்தார்.
இதன் பின் இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனது. இதனால் கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என்று சபதம் போட்டார்.
தற்போது லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான். எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:
— Blue Sattai Maran (@tamiltalkies) January 29, 2024
பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து… pic.twitter.com/AB9xqjgyQ8