முதல் மனைவி இருப்பது தெரிந்தும் அவர் கூட போனது தப்பு!! நடிகையின் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்..
தமிழ் சினிமாவில் லிஜெண்ட் இயக்குனர் என்ற பெயரை பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன். 12 படங்கள் மட்டுமே இயக்கி தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற போர்வையை போர்த்தியவர் மகேந்திரன். கடந்த கதை 26, வசனம் 27, திரைக்கதை 14 என்றும் நடிகராகவும் திகழ்ந்தார். அவர் மறைவுக்கு முன் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் மகேந்திரன் பற்றிய சில உண்மைகளை நடிகையும் அவரது மனைவியுமான நடிகை பிரேமி பேட்டியொன்றில் ரகசியங்களை கூறியிருக்கிறார். 1000 படத்திற்கு மேல் பல மொழிப்படங்களில் நடித்து பிரபலமான பிரேமி, நடிகர் செந்தாமரை தான் மகேந்திரனை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன் அவரை யாரென்று தெரியாது. பின் தங்கப்பதக்கம் படத்தின் ஷூட்டிங்கில் தான் எனக்கு மறைமுகமாக மகேந்திரனை காட்டினார்.
பின் முள்ளும் மலரும் படத்தின் ஆடிஷனுக்கு கூப்பிட்டும் நான் போகவில்லை. உதிரிப்பூக்கள் படத்தில் மகேந்திரனை பார்த்து அப்படத்தில் நடித்ததாகவும் கூறினார். மேலும், இருவரும் சந்தித்து, விருப்பப்பட்டோம். அவருக்கு ஏற்கனவே திருமணமாகியவர் என்றும் எனக்கு தெரியும்.
அப்படி தெரிஞ்சும் அவர் வாழ்க்கையில் குறிக்கிட்டு இருக்க கூடாது. அதுதான் நியாயம், அதற்கான தண்டனையை நான் அனுபவித்துவிட்டேன். அவருடன் 7 ஆண்டுகள் வாழ்ந்து ஒரு பையன் பிறந்தார். அதன்பின் அவருக்கு படம் அமையாமல் போக இரு குடும்பத்தையும் அவரால் சமாளிக்க முடியாமல் போனது.
அதனால் என்னைவிட்டு அவர் அங்கு சென்றார். அவரை பிரிந்ததும் பொருளாதாரத்திலும் மனதிலும் கஷ்டப்பட்டேன். சிங்கிள் அம்மாவாக இருந்து என் மகனை வளர்ந்து நல்ல இடத்தில் இருப்பதாகவும் நடிகை பிரேமி கூறியிருக்கிறார்.