அப்பா தயவே வேண்டாம்னு இருந்த மாஸ் நடிகரின் மகன்!! வழியில்லாமல் தூதுவிடும் நிலைமையாம்..
அப்பாவின் சிபாரிசு தயவு இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டுகிறேன் என்று மாஸ் நடிகரின் மகன் பஞ்ச் வசனம் பேசிய நிலையில், பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம். டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாம் என்ற கனவில் இருந்த மகனுக்கு இளம் நடிகர்கள் கூட நம்பி வராமல் இருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதிலும் பெரிய தயாரிப்பு நிறுவனம் பந்தா பண்ணிய நடிகரின் மகனுக்கு, எப்போது ஷூட் துவங்கலாம் என்பதில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் தாமதம் செய்து வருகிறார்களாம் தயாரிப்பு தரப்பினர். ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்தின் கவலைக்கிடமாக இருக்கும் போது படத்தை தயாரிக்க ஒரு பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள் என்பதால் சில மாதங்களாக ஆபிஸ் பக்கமெ செல்லாமல் இருக்கிறார் மாஸ் நடிகரின் மகன்.
அப்பா தயவு இல்லாமல் எப்படியும் முன்னேற முடியாது என்று உடனிருந்தவர்கள் அறிவுரை கூற அவர்கள் மூலம் தூதுவிட்டு வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. அம்மாவின் உதவியால் தான் பெரிய தயாரிப்பு நிறுவனம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் நடிகரின் மகன் இருந்திருக்கிறார். சில மாதங்கள் சந்தோஷமாக இருந்த மகனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால் டென்ஷனில் இருக்கிறாராம்.
இதனால் வெளிநாட்டிலேயே ஜாலியாக இருந்திருப்பேன் என்றும் இங்க வந்து நான் எதையுமே பண்ணல என்று தன் நண்பர்களிடம் புலம்பி இருக்கிறார். படம் ஆரம்பித்து 1 ஆண்டுகளாகியும் ஷூட்டிங் கூட போகமுடியாமல் அவஸ்த்தையில் இருக்கிறார் மாஸ் நடிகரின் மகன்.