ஆசையா எதுவும் கேட்டதில்லை... நடிகை மீனா ஓபன் டாக்..

Meena Gossip Today
By Edward Jun 23, 2024 03:33 AM GMT
Edward

Edward

Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடிக்கிறார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவரது கணவர் மரணமடைந்தது அவருக்கு பெரிய இழப்பை கொடுத்தது. அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு மாறிய நிலையில், மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார், அந்த நடிகர் தான் என்று பல கிசுகிசுக்கள் வெளியானது. இதனை மறுத்தும் கருத்தினை பகிர்ந்திருந்தார் மீனா. இந்நிலையில் கணவர் மறைந்த பல மாதங்களுக்கு பின் மீனா ஓப்பனாக அவர் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

என் கேரியரில் என்னைவிட என் கணவர் தான் முக்கியத்துவம் கொடுத்தார். இது பண்ணலாம், அது பண்ணலாம் என்று கூறி வந்தார். திரிஷ்யம் படத்தில் நடிக்க அவர் எனக்கு அப்படி ஒத்துழைப்பு கொடுத்து நடிக்க வைத்தார். என் மகள் நைனிகா நடிக்கும் போது கூட, குழப்பத்தில் என்ன பண்ணுவது என்று யோசித்தோம். தப்பா, சரியா என்று சொல்லத் தெரியாமல், ஒரு மெமரியாக இருக்குமே என்பதால் இருவரும் யோசித்து தான் அவளை நடிக்க வைத்தோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இப்போது தான் சைனீஸ் சாப்பாடு சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன். அம்மா செய்யும் முருங்கைக்காய் கீரை பிடிக்காது. நான் சமைத்து என் கணவர் சாப்பிட்டு இருக்கிறார். சாகர் ஒரு நல்ல சமையல்காரர். என்னிடம் ஆசையாய் இதை செய்து கொடு என்று கேட்டதே இல்லை.

ஆனால் நான் அவரிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். பண்ணி கொடுத்திருக்கிறார். ஸ்டீன் மீன் செய்து கொடுத்திருக்கிறார். கொரானா சமயத்தில் நான்கு பேரும் ஒன்னும் பண்ணவே இல்லை, யாரும் வரவில்லை, கால் செய்து தான் பேசுவோம்.