குளிக்க மினரல் வாட்டர் தான் வேணும்.. அடம்பிடித்த எஸ். ஜே. சூர்யா பட நடிகை
எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்து வெளிவந்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா சோப்ரா. இவருக்கு தமிழில் அறிமுகம் கொடுத்த திரைப்படம் பிரஷாந்த் நடித்த ஜான்பவான் தான்.
இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மீரா சோப்ரா செய்த அட்ராசிட்டியான விஷயம் குறித்து தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த ஜான்பவான் திரைப்படத்தில் நடித்தபோது, குற்றால அருவியில் அவர் குளிக்கும் படியான காட்சி ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி மீரா சோப்ராவை நடிக்க அழைத்துள்ளனர். அங்கு வந்து பார்த்துவிட்டு இந்த தண்ணீர்கள் நான் குளிக்க மாட்டேன், எனக்கு மினரல் வாட்டர் தான் வேண்டும் என கேட்டு ஒரே அடம்பிடித்துள்ளாராம் நடிகை மீரா சோப்ரா.
12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் இந்த டேங்கில் எப்படி மினரல் வாட்டரை நிரப்புவது என இயக்குனர் கடுப்பாகியுள்ளார்.
பின் இந்த தகவலை தயாரிப்பாளர் காதுக்கும் எடுத்து சென்றுள்ளார். அவர் அதெல்லாம் பண்ண முடியாது என சொல்ல, உடனடியாக அங்கு இருந்து கோபத்துடன் கிளம்பிவிட்டாராம் நடிகை மீரா சோப்ரா.