ஐஸ்வர்யா ராயின் பாதுகாவலருக்கு மாசம் இத்தனை லட்சம் சம்பளமா?
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்று இருவர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டில் கால்பதித்து டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்று வளர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், தன் மகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின், பாதுகாவலர் சிவராஜ் குறித்து சில சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யாவின் பாதுகாவலர் அவரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கூட கலந்து கொண்டாராம்.
அதே போல் ஐஸ்வர்யா ராய்யும் இவரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா, சிவராஜுக்கு அதிக சம்பளம் கொடுப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பாதுகாவலர் சிவராஜ்
அதன்படி, ஒவ்வொரு மாதமும் ரூ. 7 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு ரூ. 84 லட்சம் சம்பளமாக பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானின் பாதுகாவலர் ரவி சிங் ஆண்டுக்கு ரூ. 2.7 கோடியும், சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா ரூ. 2 கோடியும் சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.