மருதானி போடும் பெண்!! அம்பானி ஒரு நாளை கொடுத்த சம்பளம் இவ்வளவா?
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் வரிசையில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் மருதானி போடு மெஹெந்தி நிகழ்ச்சியில் மருதானி போடும் கலைஞரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. சமீபத்தில் நடந்த அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் நிச்சயம் நடைபெற்றது.
இருவரின் திருமண நிகழ்ச்சி வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் ஜியோ வேல்ட் செண்டரில் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்பே பிரம்மாண்ட முறையில் பல கோடி செலவு செய்து இரு விழாக்கள் நடத்தினார்கள். உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அம்பானி வீட்டில் மெஹெந்தி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. பாலிவுட்டில் நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தா, சோனம் கபூர், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், ஆலியா பட், நடாஷா தலால் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மெஹெந்தி போட்ட வீணா நக்டா என்பவர் தான் முகேஷ் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகாவிற்கும் போட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட மணப்பெண்ணின் இரு கை, கால்களுக்கு மட்டும் 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவார். தற்போது அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரின் ஒரு கைக்கு மட்டுமே 50 முதல் 75 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
அவர் கூறுகையில், பிரபலங்களின் நிகழ்ச்சிக்கு நான் கட்டணம் நிர்ணயிப்பதில்லை, அவர்கள் விரும்பியதை கூறுவார்கள் அதை கைகளில் வர்ணமிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.