விஜய் ரசிகர் மன்றத்தால் நடு தெருவுக்கு வந்த குடும்பம்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்தே விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைகள் படுபயங்கரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது புஸ்ஸி ஆனந்த் பேசும் மேடையில் பெண்மணி ஒருவர் தனது குடும்பம் நடு தெருவில் நிற்பதாக கூறி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் பேசிய அவர் "இன்று விஜய் ரசிகர் மன்றத்தால் என் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. இந்த மன்றத்தை உருவாக்கியது தங்கதுரை. ஆனால், தற்போது அந்த மன்றத்தை ஏலம் இடுகிறார்கள். அதற்கான காரணம் எனக்கு தெரியவேண்டும்" என ஆதங்கத்துடன் அவர் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
ஆதகங்கத்துடன் பேசிய அந்த பெண்ணின் சகோதரர், விஜய் ரசிகர் மன்றத்திற்காக தங்களுடைய இடத்தை கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு கட்சியில் பதவி தரவில்லையாம். இதனால் தான் அவர் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தனது உரிமையை ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதோ அந்த வீடியோ..
"????? ??????? ???????????? ?? ???????? ???? ????????? ????????"
— Trollywood ? (@TrollywoodX) September 30, 2024
One more day to thank AK ayya for dismantling FCs. ??#Ajithkumar #VidaaMuyarchipic.twitter.com/QxvmOW1j2V