வடிவேலுவின் அந்த படத்தால் என் வாழ்க்கை போச்சி! சீரியல் நடிகை பகீர்..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட காமெடினாக இருப்பவர் வைகைபுயல் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன் செய்த சில பிரச்சனையால் சமீபகாலமாக படங்கள் இல்லாமல் இருந்து வந்தார். அதையெல்லாம் தாண்டி தற்போது பல படங்களில் கமிட்டாகியும் வருகிறார். வடிவேலு பற்றி சிலர் பாராட்டினாலும் சிலர் வெறுப்பையும் கொட்டித்தீர்த்து விடுகிறார்கல். அப்படி 2000 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்து வெளியான படம் மாயி.
இப்படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் காட்சி அமைந்திருந்தது. அதில் மணப்பெண் கோலத்தில் நடித்தவர் தீபா. இதுவரை சீரியலில் நடித்து வந்த தீபா 15 ஆண்டுகளுக்கு பிறகு படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் மின்னல் தீபா. அவர் வாழ்க்கைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு மின்னல் தீபா, மாயி படம் எனக்கு பிரபலப்படுத்தி கொடுத்தாலும் அப்படம் தான் என் கேரியர் காணாமல் போக காரணமாக இருந்தது.
இந்த கேரக்டரை நல்ல பிடிச்சு நடிக்க சொல்லியும் இதனால் நல்லா வருவீங்க என்று கூறியும் வந்தார் வடிவேலு. என்னை வாடி போடின்னு தான் செல்லமாக கூப்பிடுவார். அவர் கூறியது போல் வாய்ப்பும் வரல, வந்த வாய்ப்பால் வழித்தவறிதான் போச்சு என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
மேலும் அப்படத்தில் மாறு கண் உள்ளவர்களை வைத்துதான் அந்த கதாபாத்திரம் அமைந்தது என்று செய்தி வெளியிட்டதால் எனக்கு எவ்வளவு வாய்ப்புகள் போனது என்றும் குறிப்பிட்டுள்ளார் மின்னல் தீபா. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பார்கள், அப்படி ஏற்றுக்கொள்ளாமல் பல படங்களின் லிஸ்டே இருக்கும் என்கிறார் தீபா.