என்னயா ரவுடிய, அப்போ நாங்கெல்லா, ரஞ்சித்தை விளாசிய மோகன் ஜி..
மோகன் ஜி தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து அதை ஹிட் ஆக்கி வந்தவர். ஆனால், கடைசியாக வந்த இவரின் பகாசூரன் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நேற்று(20.07.24) அன்று பா. ரஞ்சித் பிரபல கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்.
இதில் ஆளும் கட்சி திமுக-வை கடுமையாக விமர்சித்தது மட்டுமின்றி, எங்களை மீறி சென்னையில் யாராலும் ஜெயிக்க முடியாது என்று பேசினார். இதற்கு, மோகன் ஜி தன் எக்ஸ் தளத்தில், என்னங்கடா இது.
சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற, என்று டுவிட் செய்துள்ளார்.