அந்த படத்தில் நடித்த பின் அப்படியொரு உணர்வு ஏற்பட்டது!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்

Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 12, 2024 11:29 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார் மிருணாள் தாகூர்.

சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த ஸ்டார் பேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார். விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளது.

அந்த படத்தில் நடித்த பின் அப்படியொரு உணர்வு ஏற்பட்டது!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர் | Mrunal Thakur Open Talk

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு மிகவும் கஷ்டமான விஷயம் என்னவென்றால் ஒரு படத்தில் நடித்த முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இதயம் உடைவது போல் இருக்கும்.

ஒரு கதாபாத்திரத்தை நாம் நேசித்துவிட்டால் அவ்வாறாகவே மாறிவிடுவேன். எனக்கு சீதா கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர மிகவும் சிரமமாக இருந்தது என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.