இதற்கே தூக்குமாட்டித் தொங்கணும்!! மிஸ்கினை கடுமையாக விமர்சித்த பிரபலம்..
விடுதலை, கருடன் உள்ளிட படங்களில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி என்ற படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து பேசிய இயக்குநர் மிஸ்கி, பேச்சு சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த படத்தை மக்கள் பார்க்க இந்த இடத்தின் ஆடையின்றி நிற்கவும் குத்து பாடலுக்கு ஆடவும் தயார். நான் ஆடையின்றி ஆடினால் எப்படி இருக்கும் என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.
இதுகுறித்து பலர் விமர்சித்து வந்த நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் மிஸ்கின் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், மேடை நாகரீகத்தை மிஸ்கினைவிட அலட்சியப்படுத்துவது யாரும் இல்லை. அவரின் பேச்சு சிலருக்கு பிடிக்கலாம். எவ்வளவு கேவலமாக பேசினாலும் கைத்தட்டி ரசிப்பார்கள். அப்படி தான் இந்த கூல் சுரேஷ் போன்ற ஆட்களை இவ்வளவு பெரிய ஆளாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அந்த கூட்டம்.
கூல் சுரேஷைவிட கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்று மிஸ்கின் நிரூபித்திருக்கிறார், இதற்கே அவர் தூக்குமாட்டி தொங்கிடணும். என்னை கூல் சுரேஷுடன் ஒப்பிட்டு பேசிவிட்டானே படுபாவி என்று மிஸ்கின் வருந்தவேண்டும். அதற்காக மிஸ்கின் செய்வது எல்லாம் சரி என்று சிலரும் சரியில்லை என்றும் சிலரும் கூறுவார்கள்.
படைப்பாளியாக அவரை எந்தவிதத்திலும் குறைசொல்ல முடியாது. இனிமேல் நீங்கள் இப்படி பேசினால் உங்கள் படத்தை பாதிக்கும். கொட்டுக்காளி படத்தை இயக்கவில்லை, நடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது நிர்வாணமாக ஆடுவேன் என்று கூறுவது நியாயமில்லை.