அண்ணன் மனைவியின் கழுத்தை நெறித்த தனுஷ்?..படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

Dhanush Selvaraghavan Naane Varuven
By Edward Sep 29, 2022 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நானே வருவேன்

பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார்.

கலைப்புலி தானு தயாரிப்பில் யுவன் இசையில் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாதி வரவேற்பு பெற்றும் இரண்டாம் பாதி சொதப்பி இருப்பதாக ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கூறி வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெற்று அண்ணன், அண்ணி, மகன்கள் என்று அவர்களுடன் நேரத்தினை செலவிட்டு வரும் தனுஷ், செல்வராகவன் வீட்டிற்கும் சென்று நாட்களை கழித்து வருகிறார்.

தனுஷ் அட்ராசிட்டி

அந்தவகையில் செல்வராகவனின் மனைவி கீதாலஞ்சலியுடன் அன்பு மழையில் கழுத்தை நெறிக்கும் படியான ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

நானே வருவேன் படத்தில் சில பணிகளை கீதாஞ்சலி செய்துள்ளார். அப்போது படப்பிடிப்பிற்கு முன் நடந்த ஒரு சம்பவம் தான் இது, என்று கூறி இன்ஸ்டாகிராமில் கீதாஞ்சலி பதிவிட்டுள்ளார்.