திருமணத்திற்கு முன் பிரபல நடிகரை காதலித்த நடிகை நதியா.. அய்யய்யோ இது வேறயா
love
suresh
nadhiya
By Kathick
தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா. இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார். திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
இந்நிலையில், நடிகை நதியா மற்றும் பிரபல நடிகர் சுரேஷ் இருவரும் இணைத்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர். படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் அப்போது ஒரு சர்ச்சை எழுந்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ், " நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் " என்று கூறியிருந்தார்.