ரஜினிகாந்தின் மகள்கள் தான் இதற்கு காரணம்.. நகுல் பற்றி உண்மையை உடைத்த தேவயானியின் கணவர்..
90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணிநட்சத்திரங்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தவர் நடிகை தேவயானி. தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
வீட்டை எதிர்த்து திருமணம்
தேவயானியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஆறுதலாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் ராஜகுமாரன்.
இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தேவயானி இன்று வரை அவரது குடும்பத்தினருடன் சேராமல் ஒதுங்கி வருகிறார்.
தேவயானியிடம் அவரது தம்பி நகுல் தற்போது பேச ஆரம்பித்த நிலையில் 21 ஆண்டுகளாகியும் ராஜகுமாரனிடம் நகுல் பேசாமல் ஒதுக்கி வருகிறாராம்.
ரஜினி மகள்கள் தான் காரணம்
இதுகுறித்து ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நகுல் சிறுவயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் பள்ளியில் தான் மூவரும் படத்தனர்.
அப்போது எங்களின் திருமணம் குறித்து ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்திருக்கலாம். அதை அவமானமாக கருதிக்கூட நகுல் இதுவரை பேசாமல் இருக்கலாம் என்ற யூகத்தில் ராஜகுமாரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தேவயானி புதுபுது அர்த்தங்கள் சீரியலில் இரண்டாம் திருமணம் செய்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.