அவருக்கு ஜோடியா!! நடிக்கவே மாட்டேன்னு சொல்லிய நயன்தாரா!! வீட்டு எதிரிலேயே லெஜண்ட் செய்த சம்பவம்

Nayanthara Saravanan Arul The Legend
By Edward Feb 26, 2024 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா தற்போது ரூ. 6 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக அண்மையில் தகவல் ஒன்று எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன் தி லெஜண்ட் படத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் தருவதாக கூறி நயன்தாராவை தன் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டாராம் தி லெஜண்ட் சரவணன் அருள்.

அவருக்கு ஜோடியா!! நடிக்கவே மாட்டேன்னு சொல்லிய நயன்தாரா!! வீட்டு எதிரிலேயே லெஜண்ட் செய்த சம்பவம் | Nayanthara Avoid Act With Legend Saravanan Shock

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு விசயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். எப்படி ராஜமவுலி மற்றும் கே எஸ் ரவிக்குமார் தன் ஷூட்டிங்கில் சாப்பாட்டுக்கு குறை வைக்காமல் மூன்று வேலையில் அசைவ சாப்பாடு போடுவார்களோ அதேபோல் தான் லெஜண்ட் சரவணாவும் அவர் படத்தின் ஷூட்டிங்கில் அதில் கவனமாக இருந்தார். இந்த படத்திற்காக குறிப்பிட்ட கதாநாயகியை தான் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார்.

அவருக்கு ஜோடியா!! நடிக்கவே மாட்டேன்னு சொல்லிய நயன்தாரா!! வீட்டு எதிரிலேயே லெஜண்ட் செய்த சம்பவம் | Nayanthara Avoid Act With Legend Saravanan Shock

அதற்காக மேனேஜர் தரப்பில் இருந்து அந்த கதாநாயகியிடம் பேசச் செல்கிறார்கள். அப்போது அந்த நடிகையின் சம்பளம் 2 கோடி ரூபாய். அவர் கூடவா, வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதனை அறிந்த லெஜண்ட் சரவணா, 5 மடங்காக கூறி 10 கோடி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த நடிகை. இரண்டு மூன்று முறை கேட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் கோபமடைந்துள்ளார் சரவணன்.

பின், சென்னை எக்மூரில் இருக்கும் நடிகையின் லக்ஸ்சரி ஃபிளாட்டுக்கு எதிரில் இருக்கும் ஒரு ஃபிளாட்டை வாங்கி, அங்கு குடியேறி இருக்கிறார். தன்னுடைய லம்போகினி காரை நடிகையின் ஃபிளாட்டுக்கு கீழே நிறுத்தி இருக்கிறார். இதை பார்த்து ஷாக்காகி ஏன் அவரின் கார் அங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளனர். இதுபற்றி அவரே கூறியிருக்கிறார்.

ஒரு நைட் தான் இங்கே இருந்தார்.. ஒரேவொரு நாள் வருங்கால கணவரால் கண்ணீர் விட்டு அழுத பிரியா பவானி சங்கர்..

ஒரு நைட் தான் இங்கே இருந்தார்.. ஒரேவொரு நாள் வருங்கால கணவரால் கண்ணீர் விட்டு அழுத பிரியா பவானி சங்கர்..

அப்படி அவருடன் நடிக்க முடியாது என்று கூறியவர் யார் என்றால் நடிகை நயன் தாரா தான். பத்திரிக்கையில் பெரியளவில் பேசப்பட்டது. இதனால் நயன் தாராவை போலேவே இருக்கும் ஒரு நடிகையை கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி தான் நடிகை ஊர்வசி ராவ்டேலாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல் லெஜண்ட் சரவணின் அடுத்த படத்தில் யார் கதாநாயகியாக நடிப்பார்கள் என்று கேள்வி எழுந்து வருகிறது.