இந்த ஒரு விஷயம் போதுமே.. நயன்தாரா வாடகைத்தாய் சர்ச்சையில் இருந்து தப்பிக்கலாம்!
Nayanthara
Vignesh Shivan
By Parthiban.A
நயன்தாரா இரட்டை குழந்தை சர்ச்சை
நடிகை நயன்தாரா தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டு இருக்கிறார். அவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்று இருக்கிறார்.
சட்டப்படி திருமணமாகி 5 வருடம் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் தான் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற முடியும். ஆனால் நான்கே மாதத்தில் இவர்கள் குழந்தை பெற்றது எப்படி என சர்ச்சை எழுந்தது.

தப்பிக்க வழி
இந்நிலையில் நயன்தாரா இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் என்பவர் வழி கூறி இருக்கிறார்.
"வாடகைத்தாய் நெறிப்படுத்தும் சட்டம் ஜனவரி 2022ல் Notification வந்தாலும், ஜூன் 2022க்கு பிறகு தான் அமலானது. அதனால் அதற்கு முன்பே வாடகைத்தாய் மூலம் குழந்தை நடைமுறையை பயன்படுத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது" என அவர் கூறி இருக்கிறார்.
