நயன்தாராவின் தெனாவெட்டுக்கு ஆப்பு வைக்க, ஹரி போட்ட மாஸ்டர் ப்ளான்!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஐயா, சந்திரமுகி, கஜினி உள்ளிட்ட பல படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். தற்போது பாலிவுட் நடிகையாகவும் பிசினஸில் டாப் இடத்திலும் இருந்து வருகிறார். நயன் தாரா இந்த நிலைக்கு வர இயக்குனர் ஹரி வாய்ப்பு கொடுத்தது தான்.
அப்படி ஐயா படத்தில் நடித்து அறிமுகப்படுத்திய நயன் தாராவை, அடுத்து தாமிரபரணி படத்திலும் நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி. அப்போது, ஒரே அடியாக 25 நாட்கள் கால்ஷீட் கண்டிப்பா கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஹரி. ஆனால் நயன் தாரா 25 நாட்கள் பிரித்த் பிரித்து கொடுப்பதாக கூறி அதற்கேற்றது போல் ஷூட்டிங் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் நயன்.
அறிமுகப்படுத்தியதே நான் தான். என்னிடமே வேலை காட்டுகிறாயா என்று ஒரு சம்பவத்தை ஹரி செய்திருக்கிறாராம். ஆணவத்தில் ஆடிய நயன் தாராவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவரைப்போல் உடல்வாகு கொண்டு முகச்சாயல் இருக்கும் ஒரு பெண்ணை ஹரி தேடி பிடித்திருக்கிறார்.
அப்படி தேடிப்பிடித்தவர் தான் நடிகை முக்தா. அதேப்போல் நடிகை நயன் தாராவுக்கு இணையான வரவேற்பை பெற்ற முக்தா பானு, தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தபோது கவர்ச்சிக்கு நோ சொல்லியும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியும் தலையில் மண்ணை அள்ளி போட்டு சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார்.
You May Like This Video